Sunday 7 January 2018

27. விமர்சனமும் சுய – விமர்சனமும் – மா சே துங்

கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனத்துக்கு அஞ்சுவதில்லை. காரணம், நாம் மார்க்சியவாதிகள், உண்மை நம் பக்கத்தில் இருக்கிறது, அடித்தள மக்களான தொழிலாளரும், விவசாயிகளும் நம் பக்கத்தில் இருக்கின்றனர்.
(சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை
பற்றிய தேசிய மாநாட்டுரை – 12 மார்ச் 1957)

முற்றான பொருள்முதல்வாதிகள் அச்சமற்றவர்கள். நமது சக போராளிகள் எல்லாரும் துணிகரமாகத் தமது பொறுப்புகளுக்குத் தோள்கொடுப்பர், இடர்பாடுகள் அனைத்தையும் கடந்து செல்வர், பின்னடைவுகளுக்கோ அல்லது ஏளனங்களுக்கோ அஞ்ச மாட்டார்கள். கம்யூனிஸ்டுகளாகிய எங்களை விமர்சனம் செய்வதற்கும், தமது ஆலோசனைகளைக் கொடுப்பதற்கும் தயங்க மாட்டார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம். “ஆயிரம் வெட்டுகளாலும் இறப்பதற்கு அஞ்சாத ஒருவன் தான், சக்ரவர்த்தியைக் குதிரையிலிருந்து இழுத்து வீழ்த்தும் துணிவுடையவன்”- இதுவே சோஷலிசத்தையும் கம்யூனிசத்தையும் கட்டி வளர்க்கும் நமது போராட்டத்தற்குத் தேவையான தளராத உணர்வு.
(சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை
பற்றிய தேசிய மாநாட்டுரை – 12 மார்ச் 1957)

நாம் ஊக்கமான சீத்தாந்தப் போராட்டத்துக்காக நிற்கிறோம். காரணம், அது நமது போராட்டத்திற்கு உதவியாக, கட்சிக்குள்ளும் புரட்சிகர அமைப்புகளுக்குள்ளும் ஐக்கியத்தை உருவாக்கும் ஓர் ஆயுதமாக விளங்குகிறன்றது. ஒவ்வொரு கம்யூனிஸ்டும் ஒவ்வொரு புரட்சிவாதியும் இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் தாராளவாதம் சித்தாந்தப் போராட்டத்தை நிராகரித்து, போட்பாடற்ற சமாதானத்துக்காக நிற்கிறது, இதன் விளைவாக உளுத்துப்போன, பண்பற்ற கண்ணோட்டம் தோன்றி, கட்சியிலும் புரட்சிகர அமைப்புகளிலும் உள்ள சில பிரிவுகளையும் தனிநபர்களையும் அரசியல் ரீதியில் சீர்குலைக்கின்றது.
(தாராளவாத்த்தை எதிர்போம் – 7 செப்டம்பர் 1957)

உட்கட்சி விமர்சனம் சம்பந்தமாகக் குறிப்பிட வேண்டிய இன்னொரு குறிப்பும் இருக்கின்றது. அதாவது சில தோழர்கள விமர்சனம் செய்யும் போது முக்கிய பிரச்சினைகளை மறந்து சிறிய விசயங்களில் தமது கவனத்தைச் செலுத்துகின்றனர். விமர்சனத்தில் பிரதான கடமை அரசியல், அமைப்புத் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதே என்பதை அவர்கள் கொள்ளவில்லை.

தனிப்பட்ட குறைபாடுகளை பொறுத்தவரையில், அவை அரசியல், அமைப்புத் தவறுகளுடன் தொடாபுடையவையாய் இருந்தால் ஒழிய, கூடுதலாக விமர்சனம் செய்வது அவசியம் இல்லை. அப்படிச் செய்தால் சம்பந்தப்பட்ட தோழர்கள் என்ன செய்வது என்று அறியாமல் தடுமாறிவிடுவர். இன்னும் இத்தகைய விமர்சனம் ஒருகால் வளர்ந்தால், கட்சிக்குள் சிறிய தவறுகளில் பிரத்தியேகக் கவனம் செலுத்தப்படும், ஒவ்வொருவரும் அஞ்சி, மிதமிஞ்சிய எச்சரிக்கையால், கட்சியின் அரசியல் கடமைகள் மறந்து விடுவர். இது மிகப் பெரிய அபாயமாகும்.
(கட்சியில் நிலவும் தவறான கருத்துகளைத் திருத்துவது பற்றி – டிசம்பர் 1929)

உட்கட்சி விமர்சனத்தில், அகநிலைவாதம், மனம் போன போக்கு, விமர்சனத்தை இழிவு படுத்தும் போக்கு ஆகியவற்றுக்கு எதிராக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். கூற்றுகள் எப்பொழுதும் சான்றுகள் அடிப்படையாய்க் கொள்ள வேண்டும். விமர்சனம் அரசியல் அம்சத்தை வலியுறுத்த வேண்டும்.

உட்கட்சி விமர்சனம் என்பது கட்சி அமைப்பை பலப்படுத்தி, அதன் போராட்ட ஆற்றலைப் பெருக்கும் ஒரு ஆயுதம். இருந்தும் செம்படைக் கட்சி அமைப்பில், விமர்சனம் எப்பொழுதும் இப்படி இருப்பதில்லை. சில வேளைகளில் அது தனிநபர் தாக்குதலாக மாறிவிடுகின்றது. இதன் விளைவாக தனிநபருக்கு மாத்திரமல்ல, கட்சி அமைப்புக்கும் கேடு விளைவிக்கப்படுகின்றது. இது குட்டி முதலாளித்துவ வர்க்க தனிநபர்வாதத்தின் ஒரு வெளிப்பாடாகும். இதை திருத்தும் முறை யாதெனில், விமர்சனத்தின் நோக்கம் வர்க்கப் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்காகக் கட்சியின் போராட்ட ஆற்றலைப் பெருக்குவதே என்றும், அதைத் தனிநபர் – தாக்குதலுக்கான ஒரு கருவியாய் பயன்படுத்தக் கூடாது என்றும் கட்சி உறுப்பினர்களுக்கு விளக்குவதாகும்.
(கட்சியில் நிலவும் தவறான கருத்துகளைத் திருத்துவது பற்றி – டிசம்பர் 1929)

எம்மிடம் குறைபாடுகள் இருந்தால், அவை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யப்படுவதற்கு நாம் அஞ்சவில்லை. ஏனெனில் நாம் மக்களுக்காகத் தொண்டு செய்கின்றோம். எவராயினும், அவர் யாராயிருந்தாலும் பரவாயில்லை, நமது குறைபாடுகளைச் சுட்டிக்காட்டலாம். அவரது விமாசனம் சரியானதாய் இருந்தால், நாம் அவற்றைத் திருத்திக்கொள்வோம். அவர் முனமொழிவது மக்களுக்கு நன்மை பயப்பதாயிருந்தால் நாம் அவற்றைச் செயல் படுத்துவோம்.
(மக்களுக்குத் தொண்டு செய்க – 8 செப்டம்பர் 1944)

விமர்சனத்தைப் பொறுத்தவரையில், அது சரியான சமயத்தில் செய்யப்பட வேண்டும். சம்பவம் நிகழ்ந்த பின்னர் மாத்திரம் விமர்சனம் செய்வதைப் பழக்கமாக்கி விடக்கூடாது.
(விசசாயத்தைக் கூட்டுறவுமயமாக்கும் பிரச்சினை பற்றி – 31 ஜீலை 1955)


No comments:

Post a Comment