Tuesday 9 January 2018

33. படிப்பு - மா சே துங்

ஒரு பின் தங்கிய விவசாய நாடாக விளங்கும் சீனாவை ஒரு முன்னேறிய தொழில்துறை நாடாக மாற்றும் போது, நாம் கடினமான கடமைகளை எதிர் நோக்குகின்றோம், நமது அனுபவம் போதுமானதல்ல, எனவே நாம் நன்றாகப் படிக்க வேண்டும்
(சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 8வது தேசிய மாநாட்டின்
ஆரம்ப உரை – 15 செப்டம்பர் 1956)

நிலைமைகள் அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கின்றன. நமது சிந்தனையைப் புதிய சிந்தனையைப் புதிய நிலைமைகளுக்கு இசைவாக்க வேண்டுமானால், நாம் படிக்க வேண்டும். மார்க்சியத்தை ஒப்பீட்டு வகையில் நன்கு கிரகித்து, தமது பாட்டாளி வர்க்க நிலைமைப்பாட்டில் உறுதியாய் நிற்பவர்கள் கூட படித்துக் கொண்டே இருக்க வேண்டும். புதியவற்றைக் கிரகித்துக் கொள்ள வேண்டும், புதிய  பிரச்சினைகளை ஆராய வேண்டும்.
(சீனக் கம்யூனிஸ்ட் கடசியின் பிரச்சார வேலை பற்றிய
தேசிய மாநாட்டு உரை -12 மார்ச் 1957)

படிப்பில் இரண்டு விதமான கண்ணோட்டங்கள் உண்டு. ஒன்று நமது நாட்டு நிலைமைகளுக்குப் பொருந்தினாலும் சரி, பொருந்தாவிட்டாலும் சரி, அனைத்தையும் அப்படியே எடுத்து நடும் வறட்டுக் கண்ணோட்டம். இது நல்லதல்ல. மற்றது, நமது மூளையைப் பாவித்து, நமது நாட்டு நிலைமைகளுக்குப் பொருந்தியவற்றைப் படிக்கின்ற, அதாவது நமக்கு பயனுள்ள அனுபவங்களைக் கிரகித்துக் கொள்கின்ற கண்ணோட்டம். இதுதான் நாம கடைப்பிடிக்க வேண்டிய கண்ணோட்டம்.
(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக்
கையாள்வது பற்றி – 27 பிப்ரவரி 1957)

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் கோட்பாடு அனைத்தையும் தழுவியதாக பிரயோகிக்கப்படக் கூடியது. நாம் அதை வறட்டுக் கோட்பாடாக அல்ல, செயலுக்கு ஒரு வழிகாட்டியாகக் கருத வேண்டும். மார்க்சியம் – லெனினியத்தைப் படிப்பது என்பது வெறும் சொற்களையும் சொற்றொடர்களையும் படிக்கும் விசயமல்ல. பதிலுக்கு அதைப் புரட்சியின் விஞ்ஞானமாகப் படிக்க வேண்டும். அது மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் யதார்த்த வாழ்வையும், புரட்சி அனுபவத்தையும் விரிவாகப் படித்து, அதிலிருந்து வகுத்துத் தந்த பொது  விதிகளைப் புரிந்து கொள்ளும் ஒரு விசயம் மட்டுமல்ல. பிரச்சினைகளை ஆராய்வதிலும் தீர்ப்பதிலும் அவர்களுடைய நிலைப்பாட்டையும், வழிமுறையையும் கிரகித்துக் கொள்ளும் ஒரு விசயமுமாகும்.
(தேசிய யுத்தத்தில் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பாத்திரம் – அக்டோபர் 1938)

மார்க்சியக் கோட்பாட்டைப் பொறுத்த வரையில், அதில் தேர்ச்சி பெற வேண்டும், அதைப் பயன்படுத்த வேண்டும். தேர்ச்சி பெறுவதன் நோக்கம், அதைப் பன்படுத்தத்தான். ஒன்று அல்லது இரண்டு நடைமுறைப் பிரச்சினைகளைத் தெளிவு படுத்துவதில் மார்க்சிய – லெனினியக் கண்ணோட்டத்தை உங்களால் பிரயோகிக்க முடியுமானால், நீங்கள் பாராட்டுக்கு உரியவர்கள். ஓரளவு சாதனைகளை ஈட்டியவர்கள் ஆவீர்கள். எவ்வளவுக்கு அதிகமான பிரச்சினைகளை நீங்கள் தெளிவுபடுத்துகிறீர்களோ, எவ்வளவுக்கு முற்றாகவும் ஆழமாகவும் தெளிவு படுத்துகிறீர்களோ, அவ்வளவுக்கு உங்கள் சாதனையும் பெரிதாய் இருக்கும்.
(கட்சி வேலை நடையைச் சீர்செய்வோம் – 1 பிப்ரவரி 1942)

வேலையில் அனுபவம் உடையவர்கள் கோட்பாட்டுப் படிப்பை மேற்கொள்ள வேண்டும், பாரதூமாகப் படிக்க வேண்டும். அப்பொழுது தான் அவாகள் தமது அனுபவத்தை ஒழுங்கு படுத்தி, தொகுத்து, அதைக் கோட்பாடு மட்டத்துக்கு உயர்த்தக் கூடியவர்களாய் இருப்பர். அப்பொழுது தான் தமது அரைகுறை அனுபவத்தை பொது உண்மை என்று கருதாமல், அனுபவவாதத் தவறுகளை இழைக்காமல் இருக்க முடியும்.
(கட்சி வேலை நடையைச் சீர்செய்வோம் – 1 பிப்ரவரி 1942)

பொருளாதார வேலையில் தேர்ச்சி பெற்ற எல்லோருடம் இருந்து (அவர்கள் யாராயிருந்தாலும் பரவாயில்லை) நாம் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் அவர்களை ஆசிரியர்களாக மதித்து, அவர்களிடம் இருந்து மாரியாதையாகவும் நேர்மையாகவும் கற்க வேண்டும், நாம அறியாதவற்றை அறிந்தது போல் நடிக்கக் கூடாது.
(மக்கள் ஜனநாயக சர்வாதிகரம் பற்றி – ஜீன் 1949)

சுய-திருப்தி என்பது படிப்பின் விரோதி. இந்தச் சுய-திருப்தி உணர்வை நம்மிடம் இருந்து நீக்கினால் ஒழிய, நாம் ஒன்றையும் உண்மையாகக் கற்க முடியாது. நம்மைப் பொறுத்த வரையில் “படிப்பில் தெவிட்டாமை” என்ற கண்ணோட்டத்தையும், பிறருக்கு “கற்றுக் கொடுப்பதில் சளையாமை” என்ற கண்ணோட்டத்தையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.
(தேசிய யுத்தத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம் – அக்டோபர் 1938)

மார்க்சியத்தை உண்மையில் ஒருவர் கிரகித்துக் கொள்ள வேண்டுமானால், அதை அவர் நூல்களில் இருந்து மாத்திரம் அல்ல, பிரதானமாக வர்க்கப் போராட்டத்தின் மூலமும், நடைமுறை வேலை, பரந்துபட்ட தொழிலாளர் – விவசாயிகளுடன் நெருங்கிய தொடர்பு ஆகியவற்றின் மூலமும் படிக்க வேண்டும். மார்க்சிய நூல்கள் சிலவற்றைப் படிப்பதோடு, நமது அறிவுத்துறையினர் பரந்துபட்ட தொழிலாளர் விவசாயிகளுடன் நெருங்கிய தொடர்புகள் மூலமும், தமது சொந்த நடைமுறை வேலை மூலமும் சிறிது விளக்கம் பெற்ற போது, நாம் எல்லோரும் ஒரே மொழியைப் பேசுவது சாத்தியம், தேச பக்தி என்ற பொது மொழியையும், சோஷலிசம் என்ற பொது மொழியையும் பேசுவது மாத்திரம் அல்ல, கம்யூனிச உலக நோக்கு என்ற பொது மொழியைக் கூடப் பேசுவது சாத்தியம். இப்படி ஏற்பட்டால், நாம் எல்லோரும் இன்னும் நன்றாக வேலை செய்வது நிச்சயம்.
(சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய
 தேசிய மாநாட்டு உரை – 12 மார்ச் 1957)


No comments:

Post a Comment